Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு பணியில் முழு அளவில் ஈடுபடவில்லை. எனவே தலைமை செயலகத்துக்கு அவர்கள் வராமல் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், 26-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பல அமைச்சர்கள் வந்து அரசு பணிகளைத் தொடங்கினர்.
எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.